ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஸம்பா, விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் யார் என்று டுவிட்டரில் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் 2016, பெங்களூர் அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன், தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில், விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது என் அதிர்ஷ்டம் என்று பாராட்டி இருந்தார்.
அந்த டுவிட்டர் பதிவுக்கு, புனே அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்பின் பவுலர் ஆடம் ஸம்பா இவர்கள் யார்? என்ற கேள்வி எழுப்பிருந்ததார்.
ஆடம் ஸம்பாவின் இந்த கருத்துக்கு, டுவிட்டரில் இந்திய கிரிக்கெட் ரசிகள் மோசமாக கேலி செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆடம் ஸம்பா, தனது பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், புனே அணிக்கு எதிராக இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பெங்களுர் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.