Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் வொயிட்வாஷ்… சச்சினுக்குப் பிறகு ரோஹித் படைத்த மோசமான சாதனை!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:35 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வொயிட்வாஷ் தோல்விக்குப் பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா கேப்டனாக தான் சரியாக செயல்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

இந்திய அணி கடைசியாக 2000 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் வொயிட்வாஷ் ஆகியிருந்தது. அந்த தொடருக்கு சச்சின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி நியுசிலாந்திடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது. சச்சினுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வொயிட்வாஷ் ஆன கேப்டன் என்ற மோசமான சோதனையை ரோஹித் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments