Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த மண்ணில் வொயிட்வாஷ்… சச்சினுக்குப் பிறகு ரோஹித் படைத்த மோசமான சாதனை!

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (16:35 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வொயிட்வாஷ் தோல்விக்குப் பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா கேப்டனாக தான் சரியாக செயல்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

இந்திய அணி கடைசியாக 2000 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் வொயிட்வாஷ் ஆகியிருந்தது. அந்த தொடருக்கு சச்சின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி நியுசிலாந்திடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது. சச்சினுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வொயிட்வாஷ் ஆன கேப்டன் என்ற மோசமான சோதனையை ரோஹித் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments