Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

Advertiesment
சாய் சுதர்சன்

vinoth

, புதன், 21 மே 2025 (08:33 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போதைய டி 20 போட்டிகளில் வீரர்கள் விதவிதமான ஷாட்களைக் கண்டறிந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் சாய்சுதர்சன் பழைய டெஸ்ட் கால பேட்ஸ்மேன்கள் போன்ற ஒரு மரபான வீரர். மரபான ஷாட்களை மட்டுமே ஆடி ரன்களை சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாய் சுதர்சனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சிலாகித்துள்ளார். அதில் “விராட் கோலிக்குப் பிறகு ஒருவரின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்க்கிறேன் என்றால் அது சாய் சுதர்சன் பேட்டிங்தான். ” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்சன் என்று அவர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறுதல் வெற்றி கூட இல்லை.. சிஎஸ்கேவுக்கு இன்னொரு தோல்வி..!