Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில் பயணம் செய்த தோனி

13 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில் பயணம் செய்த தோனி
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (08:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் ஐபிஎல் போட்டியிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக அவர் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் அணியின் மற்ற வீரர்களுடன் 13 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்தார் தோனி



விஜய் ஹசாரே கோப்பையில் ஜார்கண்ட் அணி தன் முதல் போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அணியின் மற்ற இளம் வீரர்களுடன் 13 வருடங்களுக்கு பிறகு ரயிலில் நேற்று பயணம் செய்தார் தோனி

ஜார்கண்ட் அணி வீரர்களுடன் ஹடியாவில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா வரை முதல் வகுப்பு ஏசி கோச்சில் ரயிலில் செல்லும் பொது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தோனி பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே விளம்பரத்தில் லைஃப் செட்டில்: கோலிக்கு அடித்த அதிஷ்டம்!!