மைதானத்தில் பறந்த திடீர் விமானம்- என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (16:43 IST)
நேற்று ஆஸ்திரேலியா- இங்கிலாந்து ஆட்டத்தின்போது மைதானத்துக்கு மேலே தோன்றிய திடீர் விமானத்தால் ரசிகர்கள் பதட்டமடைந்தனர்.

நேற்று லண்டன் எக்பாஸ்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றது. போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வானத்தில் மேகங்களுக்கிடையே திடீரென ஒரு விமானம் தோன்றியது. மைதானத்தை நெருக்கி அந்த விமானம் வந்தது. அந்தன் பின்னால் “உலகம் கண்டிப்பாக பலுசிஸ்தானுக்காக பேச வேண்டும்” என எழுதியிருந்தது. மிகவும் தாழ்வாக பறந்து வந்த அந்த விமானம் மீண்டும் மேகங்களுக்குள் புகுந்து மறைந்தது.

பலுசிஸ்தானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச வேண்டுமென யாரோ இத செய்திருக்கிறார்கள். மைதானத்திற்கு மேல் விமானங்கள் பறக்க அனுமதியில்லாதபோது இந்த விமானம் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின்போது சில விமானங்கள் “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் குறுக்கு மறுக்காக பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments