Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு விடுதி? யுவராஜ் சிங்கிற்கு அரசு நோட்டீஸ்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (18:59 IST)
கோவா  மாநில அரசு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி-20 கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருவதுடன்,  விளம்பரங்களில் நடிப்பு, சொந்த தொழிலி கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

இந்த நிலையில்,  யுவராஜ்சிங்கிற்கு கோவாவில் ஒரு சொகுசு வீடு உள்ளது, இதனை வாடகைக்கு விடும் அவர், சமீபத்தில் தன் சமூகவலைதளத்தில்,  இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த கோவா மாநில அரசு,யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவா மாநிலத்தில் விடுதி நடத்த அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால்,  யுவராஜ் இதுகுறித்து அனுமதி பெறவில்லை என தெரிகிறது. எனவே டிசம்பர் 8 ஆக்ம் தேதி காலை 11 மணி அளவில்  நேரில் ஆஜராக வேண்டுமென கோவா சுற்றுலாத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments