Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் கோலியின் ஆட்டத்தைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:40 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து விளையாடிய அவரின் இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் இக்கட்டமான ஒரு நிலைமையின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார்.

அதிலிருந்து கோலி ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்க, வரும் உலகக் கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பை இந்திய அணி மிகவும் நம்பியுள்ளது. இந்நிலையில் கோலியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனுமான டிவில்லியர்ஸ் கோலி “கோலி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்காக சிறப்பான விஷயங்களை செய்யப் போவதைக் காண என்னால் காத்திருக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments