Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் கோலியின் ஆட்டத்தைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (07:40 IST)
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து விளையாடிய அவரின் இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் இக்கட்டமான ஒரு நிலைமையின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார்.

அதிலிருந்து கோலி ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்க, வரும் உலகக் கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பை இந்திய அணி மிகவும் நம்பியுள்ளது. இந்நிலையில் கோலியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனுமான டிவில்லியர்ஸ் கோலி “கோலி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்காக சிறப்பான விஷயங்களை செய்யப் போவதைக் காண என்னால் காத்திருக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments