Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஓவருக்கே 6 விக்கெட்டுகள் காலி! – இலங்கையை வெச்சு செய்த இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (16:33 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டிகள் தொடங்கி சில நிமிடங்களே ஆன நிலையில் 6 ஓவருக்கே 6 விக்கெட்டுகள் காலியாகி இலங்கை பரிதாபமான நிலையில் உள்ளது.



ஆசியக்கோப்பை போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிக் கொள்கின்றன. 3 மணிக்கு தொடங்கிய போட்டி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. உள்ளே நுழைந்துமே பெரேராவின் விக்கெட்டை ஜாஸ்ப்ரிட் பும்ரா தூக்கினார். தொடர்ந்து பந்து வீச வந்த முகமது சிராஜ் 3 ஓவர்களில் (15 பந்துகள்) தொடர்ந்து அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தற்போதைய நிலவரப்படி 8 ஓவர்களிலேயே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது. இலங்கை அணி மிக மோசமான தோல்வியை தழுவும் ஆபத்தில் உள்ள அதே சமயம் ஆசியக்கோப்பையிலேயே மிக குறைவான ரன்களில் நடப்பு சாம்பியன் அணியை சுருட்டி வெற்றி பெறும் வாய்ப்பும் இந்தியாவிற்கு உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments