Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டாச்சா..? இதோ வந்துட்டேன்! – ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் மழை!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (15:17 IST)
ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று தொடங்கிய நிலையில் எதிர்பார்த்தது போலவே மழை குறுக்கிட்டுள்ளது.



பரபரப்பாக நடந்து வந்த ஆசியக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சேம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கியது முதலாகவே மழை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

முன்னதாக இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளோடு மோதியபோதும் மழை காரணமாக போட்டிகள் தடைப்பட்டது. இன்று தற்போது இறுதி போட்டிகள் தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் முதல் பந்தை வீசுவதற்குள்ளேயே மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்று மேட்ச் தொடங்குமா அல்லது நாளை ஒத்தி வைக்கப்படுமா என்ற கவலையோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments