Publish Date: Thu, 29 Aug 2024 (14:53 IST)
Updated Date: Thu, 29 Aug 2024 (14:54 IST)
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சமீபத்தில் விஜய்யின் லியோ படத்தில் அவரின் சகோதரி வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தால் அவருக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.
அதையடுத்து வாய்ப்புகளைக் கவர்வதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போது இளவரசி போன்ற உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.