Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளின் பிறந்தநாளை கோலாகலாமா கொண்டாடிய சஞ்சீவ் - ஆல்யா!

மகளின் பிறந்தநாளை கோலாகலாமா கொண்டாடிய சஞ்சீவ் - ஆல்யா!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (14:42 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். 
webdunia
இந்நிலையில் மகளின் பிறந்தநாளை சஞ்சீவ் ஆல்யா மானசா குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளனர். குழந்தைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் ஜோடியான ஆதி & நிக்கி கல்ராணி…. ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?