Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலூட்டும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய உண‌வு முறைகள்...!

பாலூட்டும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய உண‌வு முறைகள்...!
பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் அதாவது முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.
முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவாக அமையும்.
 
பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான  வைட்டமின் ‘ஏ’ சத்தும் அடங்கியுள்ளது.
 
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான‌ கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால்  பால் சுரப்பு சீராக இருக்கும்.
 
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும். கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய்யில் கலந்து சாப்பிடலாம்.
 
பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். நெய்யில்  பூண்டை தோலுடன் வதக்கி பின் தீலை நீக்கி சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான காளான் குழம்பு செய்ய...?