Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரத்துறையில் தனியார் நிறுவனங்கள்? பட்ஜெட் அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (11:50 IST)
மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் மின்சார துறை குறித்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும் முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் வரலாற்றில் இந்த முறை டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி மின்சாரத்துறை குறித்த அறிவிப்பில், நாட்டில் மாநில அளவிலான மின்சார வசதிகளை மேம்படுத்த ரூ.3.95 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் நுகர்வோர் இனி தாங்கள் விரும்பும் மின் விநியோக நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை பெற வசதி செய்யப்படும் என்றும், மின்சார துறையில் போட்டிகளை ஏற்படுத்துதல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மாநில மின்சார வாரியங்கள் எதிர்காலத்தில் தனியார்மயமாக்க படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments