Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்; மக்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன??

Arun Prasath
வியாழன், 23 ஜனவரி 2020 (20:45 IST)
வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் தனியார் செய்திதாள் ஒன்று மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.

வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றப்பின் தாக்கல் செய்யப்படுகிற இரண்டாவது பட்ஜெட் ஆகும். இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இது குறித்து மக்களிடம் இணையத்தில் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் 50 சதவிகிதத்தினர் வருமான வரிச் சலுகையை உயர்த்திட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக நிதியை 30 சதவிகிதத்தினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

விவசாயத்திற்கு  16 சதவிகிதத்தினரும், கட்டமைப்புக்கு 26 சதவிகிதத்தினரும் அதிக நிதியை எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு 11 சதவிகிதத்தினர் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே போல் நுகர்வோர் நலனில் வரியை குறைந்து ஊக்க சலுகை அளிக்க வேண்டும் என 29 சதவிகிதத்தினர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments