Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் : சுரேஷ் பிரபு

ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்

Advertiesment
Railway budget 2016-17
, புதன், 24 பிப்ரவரி 2016 (20:39 IST)
நாளை ரயில்வே பட்ஜெட் (2016-17) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு சார்பாக ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நாளை 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பின், அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த சுரேஷ் பிரபு “ரயில்வே பட்ஜெட், நாட்டு நலனையும், ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு  அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம்.
 
கட்டண  உயர்வு இல்லாமல், விளம்பரங்கள், வணிகமயமாக்குதல், உபரி நிலம் ஆகியவை மூலம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil