Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை இடையே பாலம் வேண்டாம்: இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் கருத்து

Siva
செவ்வாய், 25 ஜூன் 2024 (13:30 IST)
இந்தியா - இலங்கை இடையே பாலம் வேண்டாம் என்றும் பாலம் அமைத்தால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து என்றும் இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் என்பவர் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே கடல்வழி பாலம் அமைக்க இந்திய, இலங்கை அரசுகள் திட்டம் அமைத்து வரும் நிலையில் இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் கூறினார்.
 
இந்த நிலையில் இலங்கை கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் இது குறித்து கூறிய போது பல நூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய மன்னர்கள் இலங்கைக்கு படையெடுத்து சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அந்த பகுதிகளை மீட்க இலங்கை மன்னர்கள் மிகுந்த கஷ்டப்பட்டனர்.
 
எனவே இந்தியா - இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி இலங்கை தமிழ்நாட்டில் ஒரு பகுதியாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாலம் அமைக்க இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

அடுத்த கட்டுரையில்
Show comments