Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பர்களே நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம்

Advertiesment
கன்னட நடிகை
, புதன், 3 மே 2017 (14:45 IST)
கன்னட நடிகை ஒருவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரது நண்பர்கள் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கன்னட நடிகை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் காரில் வெளியே சென்றுள்ளார். ஹெக்கனஹெள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர். காரில் இருந்து அவரது நண்பர்கள் இருவரும் வெளியே வந்துள்ளனர்.
 
நடிகையும் காரை விட்டு வெளியே வந்துள்ளார். உடனே அவர்களும் இருவரும் சேர்ந்து நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். இதையடுத்து நடிகை அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்து கேப் மூலம் காவல்நிலையம் சென்று அந்த இரண்டு நண்பர்களும் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகைக்கு கடந்த இரண்டு வருடமாக யாரோ ஒருவர் போனில் அசிங்கமாக பேசி வந்துள்ளார். அது அவரது நண்பர்தான் என தற்போது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பாகுபலி’யால் பதறும் தமிழ் சினிமா