Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் முடிவு

Webdunia
சனி, 26 மே 2018 (07:57 IST)
ஒரே நேரத்தில் ‘க்ரிஷ்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹிருத்திக் ரோஷன் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருணாள் தாகூர், பங்கஜ் திரிபாதி, நந்திஷ் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்தப் படத்துக்குப் பிறகு தன்னுடைய சூப்பர் ஹிட் படமான ‘க்ரிஷ்’ படத்தின்அடுத்த பாகத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் ஒரே நேரத்தில் 3 மற்றும் 4ஆம் பாகங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன்னால் வெளியான இரண்டு பாகங்களில் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
 
கடந்த இரண்டு பாகங்களில் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பிரியங்கா சோப்ரா என ஆளுக்கொரு பாகத்தில் ஹீரோயினாக நடித்தனர். 3 மற்றும் 4ஆம் பாகத்துக்கு புதிதாக இரண்டு ஹீரோயின்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments