Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ பாஸ் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும் – முதல்வர் உறுதி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:53 IST)
தமிழகத்தில் இ பாஸ் வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். அதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். மேலும் இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த வெப் சீரிஸ் பணிகளைத் தொடங்கிய விஜய் சேதுபதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் சர்தார் 2.. ஆனாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கவில்லையாம்!

குட்னைட் இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தக் லைஃப் படத்தின் வியாபாரத்தில் புதுமையைப் புகுத்திய கமல்…!

“கேமராவுக்கு முன் முகமூடி… பெண்களை வெறுக்கும் நடிகர்கள்”… மாளவிகா மோகனன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments