Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவத் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்த தீபிகா படுகோனே

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (10:39 IST)
பல தடைகளை கடந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்ற பெயரோடு கடந்த 24ஆம் தேதி வெளியானது. பத்மாவத் ராஜ்புத் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பத்மாவத் திரைப்படத்தை வெளியிட கூடாது என பல இடங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைப்பெற்றன.
இந்நிலையில் பத்மாவத் திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இப்படத்தின் வசூல் ரூ.160 கோடியை தாண்டி உள்ளது. இதில் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மீது கர்னி சேனா அமைப்பினர் கடும் கோபத்தில் உள்ளனர். தீபிகாவின் மூக்கை அறுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தருவதாகவும் அறிவித்துள்ள கர்னி சேனா அமைப்பினருக்கு, தீபிகா படுகோனே தற்பொழுது தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
 
அதன்படி, என் மூக்கை அறுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவித்திருந்தவர்கள், என் மூக்கிற்கு பதிலாக எனது பாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நான் சிறுவயதிலேயே மிகவும் தைரியமான பெண் என்று பெயர் எடுத்தவள், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவள் நான் இல்லை என்று தன்னை மிரட்டிய கர்னி சேனா அமைப்பினருக்கு தீபிகா படுகோனே பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments