Publish Date: Thu, 12 Mar 2020 (19:37 IST)
Updated Date: Thu, 12 Mar 2020 (19:40 IST)
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்து.
திருமணத்திற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கணவன் மனைவியாக சேர்ந்து வரும் அந்த அழகை பார்க்க ரசிகர்கள் கூடுவதும், அன்றைய தலைப்புச்செய்திகளில் இடம்பெறுவதுமாக இருக்கிறார்கள் தீப் -ரன். இதற்கிடையில் இருவரும் சமூகவலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, பாராட்டுவது, கொஞ்சுவதுமாக இருந்து வருகின்றனர். இதனை அவரது ரசிகர்கள் மிகவும் கியூட்டாக இருக்கிறது என கூறி ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களது கனவு கன்னியாக ஜொலித்து வரும் தீபிகா படுக்கேனே சமீபத்தில் கடற்கரையில் செம்ம கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.