Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆழாதீங்க தாத்தா; ஆறுதல் சொல்லி கிளம்பிய ஆராத்யா பச்சன்!

ஆழாதீங்க தாத்தா; ஆறுதல் சொல்லி கிளம்பிய ஆராத்யா பச்சன்!
, செவ்வாய், 28 ஜூலை 2020 (17:07 IST)
அமிதாப் பச்சனின் பேத்தி ஆராத்யா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் தாத்தாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். 
 
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ரு வருகின்றனர். 
 
இவர்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும், மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. முதலில் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் பின்னர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 
 
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா குணமாகி நேற்று வீடு திரும்பினார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் முன்பு ஆராத்யா தன் தாத்தா அமிதாப் பச்சனை கட்டிப்பிடித்து அழாதீங்க, நீங்களும் விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என்று ஆறுதல் கூறினார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ஹிட் பட’’ பிரபல இயக்குநர் மகனுக்கே இந்த நிலைமையா ? வாய்ப்புகள் மறுப்பதாக டுவீட் !