Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை குறித்த கிசுகிசுக்கு முற்றுபுள்ளி வைத்த அபிஷேக்!!

மனைவியை குறித்த கிசுகிசுக்கு முற்றுபுள்ளி வைத்த அபிஷேக்!!
, ஞாயிறு, 27 நவம்பர் 2016 (14:27 IST)
ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கை விட மூன்று வயது மூத்தவர். கடந்த 2007–ம் ஆண்டு இருவரும் இரு குடும்ப சம்மததோடு திருமணம் செய்துகொண்டனர்.


 
 
ஐஸ்வர்யா ராயை பற்றிய கிசுகிசுக்களுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அதுவும் இவரை பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாக கிளம்புவது காதல் காட்சிகளில் தான். 
 
இது குறித்து அவரது கணவர் மனம்திறந்துள்ளார். அதில் அவர், என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தான் இந்த பூமியில் மிகவும் அழகான பெண். நான் ஒரு நடிகர் என்பதாலோ அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும், அவர் ஒரு உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. மாறாக, நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலால் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளோம். அதனால் திரைப்படங்களில் எப்படிப்பட்ட காட்சியில் ஐஸ்வர்யா நடித்திருந்தாலும், என்னுடைய காதல் மாறாது. இதை உணர்ந்ததாலே ஐஸ்வர்யா தைரியமாக நடிக்கிறார்’’ என கூறியுள்ளார்.
 
இதன் மூலம், ஏய் தில் ஹை முஷ்கில் திரைப்படத்தில் ஐஸ்வர்யா–ரன்வீர் சிங் நடித்திருந்த கவர்ச்சி காட்சிகளின், கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”என்னை காயப்படுத்தாதீர்கள்”: லட்சுமி ராமகிருஷ்ணன் கதறல்!!