Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜகஸ்தானில் ரஷ்ய துருப்புகள் ஏன்? ஆண்டனி பிளிங்கன் கேள்வி

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (10:54 IST)
கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் டஜன் கணக்கிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் ரஷ்யாவின் உதவியை நாடினார்.
 
ரஷ்ய துருப்புகளும் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டன. ரஷ்ய துருப்புகள் ஏன் கஜகஸ்தானில் களமிறக்கப்பட்டதென தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
 
மேலும் தங்கள் நாட்டுக்குள் நிலவும் அமைதியின்மையைத் தீர்க்க கஜகஸ்தான் ஏன் ரஷ்ய ராணுவத்தின் உதவியை நாட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ரஷ்ய தரப்போ, 'கலெக்டிவ் செக்யூரிட்டி டிரீட்டி ஆர்கனைசேஷன்' என்கிற ராணுவ ஒப்பந்தத்தின்படி கஜகஸ்தானுக்கு உதவுவதாக பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments