Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா திரிபு வகைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் பெயர் சூட்டிய WHO

கொரோனா திரிபு வகைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் பெயர் சூட்டிய WHO
, செவ்வாய், 1 ஜூன் 2021 (14:39 IST)
கொரோனா திரிபு வகைகளுக்கு கிரேக்க எழுத்துகளில் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியிருக்கிறது.

 
இதன் மூலம் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா திரிபுகள் கிரேக்க எழுத்துகளால் அடையாளப்படுத்தப்படும்.
 
கொரோனா திரிபு தொடர்பான பல்வேறு தயக்கங்களை களையும் வகையில் இந்த புதிய முயற்சி கைகொடுக்கும் என்று நம்புவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட இந்திய வகை கொரோனா திரிபுக்கு B.1.617.2 என்று பெயரிடப்பட்டது.
 
ஆனால், அந்த எழுத்துகளுடன் அலுவல்பூர்வமாக இந்திய வகை திரிபுவை உலக சுகாதார அமைப்பு அழைக்கத் தொடங்கவில்லை. இதற்கிடையே, கொரோனா திரிபுக்கு வெவ்வேறு பெயர் சூட்டும் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கையை இந்தியா விமர்சித்தது.
 
இருப்பினும், கொரோனா திரிபு வகைகள் தொடர்பாக எவ்வித தயக்கமோ தடங்கலோ இருக்கக் கூடாது என்றும் அந்த எண்ணத்துடன் எந்தவொரு நாட்டையும் வேற்றுமைப்படுத்திப் பார்க்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிக்குழு தலைமை அதிகாரி மரியா வேன் கெர்கோவ் தெரிவித்தார்.
 
இத்தகைய எழுத்து வடிவ பெயர்கள், அறிவியல்பூர்வ அடிப்படையில் தரவுகளை அடையாளப்படுத்தி புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.
கவலை தரக்கூடிய கொரோனா வைரஸ் திரிபுகளை அறியவும் அவை தொடர்பான தரவுகளை சேகரிக்கவுமே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். எந்தெந்த கொரோனா வைரஸ் திரிபுவுக்கு என்ன பெயர் என்ற முழு விவரத்தையும் உலக சுகாதார அமைப்பு அதன் இணையதள இணைப்பில் பதிவேற்றியிருக்கிறது.
 
ஒருவேளை 24க்கும் அதிகமான புதிய திரிபுகள் அலுவல்பூர்வமாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு உரிய கிரேக்க எழுத்துகளை பயன்படுத்த முடியாத நிலை எழுந்தால், புதிய பெயரிடும் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு பரிசீலிக்கும் என்றும் வேன் கெர்கோவ் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!