Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:47 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவிலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

"என்ன நடக்கிறது என நாம் பார்க்க வேண்டும்," என வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் போட்டி வேட்பாளரான ஜோ பிடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்குவாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, "நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று," என டிரம்ப் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்றதொரு பதிலைத்தான் அளித்திருந்தார் டிரம்ப். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்ட டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஹிலாரி அப்போது விமர்சித்திருந்தார்.

இருப்பினும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று பதவியேற்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments