Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு - ஐ.நா தகவல்

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (21:31 IST)
சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு
 
குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா கூறுகிறது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனத் துருக்கி அதிபர் எர்துவான் கூறி உள்ளார்.
 
ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர். சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனை முதுகில் குத்தும் செயலாகக் கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments