Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு - ஐ.நா தகவல்

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (21:31 IST)
சிரியா மீதான துருக்கி நாட்டின் தாக்குதல்: ஒரு லட்சம் மக்கள் பரிதவிப்பு
 
குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா கூறுகிறது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனத் துருக்கி அதிபர் எர்துவான் கூறி உள்ளார்.
 
ஐ.எஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர். சிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது. ஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளைத் திரும்பப் பெற்றது அமெரிக்கா. இதனை முதுகில் குத்தும் செயலாகக் கருதுகிறது சிரியா ஜனநாயகப் படை.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments