Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவானில் பிரதமர் ஹெலிகாப்டரை மறித்த போர் விமானங்கள்: பகீர் புகார்!!!

Advertiesment
நடுவானில் பிரதமர் ஹெலிகாப்டரை மறித்த போர் விமானங்கள்: பகீர் புகார்!!!
, செவ்வாய், 26 மார்ச் 2019 (08:43 IST)
சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தான் சென்ற ஹெலிகாப்டருக்கு துருக்கியின் போர் விமானங்கள் 'தொந்தரவு' கொடுத்ததாக கிரேக்க பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
நேற்று (திங்கட்கிழமை) கிரேக்கத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த துருக்கியின் போர் விமானங்கள், தனது ஹெலிகாப்டரை 'தாழ்ந்து பறக்கும்' நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி, துருக்கியின் செயலை அவர், "அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அலெக்சிஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி ராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள் வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
 
கிரேக்கம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இஜியன் தீவு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கட்சி மாறும் ரஜினி-கமல் பட நடிகை!