Publish Date: Thu, 19 Sep 2019 (18:49 IST)
Updated Date: Thu, 19 Sep 2019 (19:08 IST)
தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது .
பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா காட்டுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்பட்டுள்ளது.
தெய்வீக சக்தி கொண்டது இந்த பாம்பு, இதற்கு உணவு படைத்தால் தாங்கள் விரும்பியது நடக்கும் என்று நம்பிய பக்தர்கள், அந்த பாம்பை பிடித்து வைத்துக்கொண்டு அதிகமான உணவுகளை கொடுத்துள்ளனர். இவற்றை உண்ண முடியாமல் பாம்பு திணறி உள்ளது.
இந்த சூழலில் அதிகாரிகள் அந்த பாம்பை மீட்டுள்ளனர்.
அதைப் பிடித்து வைத்திருந்தவர்கள் படைத்த ஆட்டை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பாம்பு, ஆட்டின் ரத்தத்தை கொடுத்தபோது அதை மட்டும் உட்கொண்டது.