Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போன நாய், உரிமையாளரிடம் இணைய காரணமான பியர்... !

காணாமல் போன நாய்,  உரிமையாளரிடம் இணைய காரணமான பியர்... !
, புதன், 5 பிப்ரவரி 2020 (07:40 IST)
நம் ஊர் சினிமாக்களில் எல்லாம் குடும்ப பாட்டு பிரிந்து போன குடும்பத்தை இணைக்கும் தானே?
 
அது போல காணாமல் போன ஒரு நாய் அதன் உரிமையாளருடன் இணைய காரணமாக ஆகி இருக்கிறது பியர். இது சம்பவமானது அமெரிக்காவில் நடந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு மே மாதம் மோனிகா மேத்திக்கு சொந்தமான 'ஹேசல்' எனும் நாய் காணாமல் போய் இருக்கிறது.
 
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. சில தினங்களுக்கு முன்பு ஒரு பியர் டின்னில் நாயின் முகம் அச்சடிக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் மோனிகா பார்த்திருக்கிறார். அந்த நாயை பார்த்ததும் மோனிகாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
 
ஃபுளோரிடா மாகாணத்தில் மோனிகா வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பியர் தயாரிப்பு மையத்தில் 'டே டே' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நாய் இருந்தது.
 
பின்பு அவர்களை தொடர்பு கொண்டு நாயை திரும்ப பெற்றிருக்கிறார்.
 
அதெல்லாம் சரி, ஏன் அந்த பியர் நிறுவனம் நாயை முகத்தை பியர் டின்னில் அச்சடித்தது என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. ஆதரவற்ற நாய்களை யாராவது தத்தெடுப்பதற்காகதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
 
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாசமாக திட்டிய இயக்குனர்: போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த நடிகைகளால் பரபரப்பு