நிபா வைரஸ் - தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (14:37 IST)
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 
 
இதன்படி காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்னை, மன நல பாதிப்பு ஆகியவை நிபா வைரஸுக்கான முக்கிய அறிகுறி களாக கூறப்பட்டுள்ளன. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
 
கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே நிபா வைரஸ் அறிகுறி நோயாளிகளை கையாள வேண்டும் எனவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதார பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments