Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா யுக்ரேனை தாக்கும் - ஜோ பைடன்

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:30 IST)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பின்படி, இந்த தாக்குதலில் யுக்ரேன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்றும் பைடன் கூறினார்.

ரஷ்ய படைவீரர்கள் சுமா் 169,000-190,000 பேர் யுக்ரேனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு யுக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளில் ரஷ்ய ஆதரவு போராளிகளை உள்ளடக்கியது என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டொனெட்ஸ்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக யுக்ரேனின் ராணுவ புலனாய்வு சேவை கூறியது.

மேலும் ரஷ்யா எதிரிகளை குற்றம் சாட்டும் நோக்கத்துடன் சில வேலைகளை செய்து வருகிறது என்கிறது யுக்ரேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments