Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:19 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே பிரமுகர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சினிமா, அரசியல் பிரபலங்கள் காலையிலேயே சென்று வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிராப்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லை நகரில் வாக்கினை செலுத்தினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். முத்தூர் வாக்குசாவடியில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் வாக்கு செலுத்தினார். மேலும் பல திரை மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments