Publish Date: Thu, 11 Apr 2019 (10:23 IST)
Updated Date: Thu, 11 Apr 2019 (10:25 IST)
தனது கிராமவாசிகளின் துயரை போக்க, தாமாகவே ஒரு சாலை கட்ட உள்ளதாக கென்யாவில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அடர்ந்த புதர்களின் வழியாக, அருகில் உள்ள கடைகள் வரை அந்த சாலையை அவர் அமைக்கப் போகிறார்.
மண்வெட்டி மற்றும் கோடாரியை பயன்படுத்தி நிக்கோலஸ் முசமி, ஆறு நாட்களில் இதுவரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை இதற்காக தயார்படுத்தியுள்ளார்.
உள்ளூர் தலைவர்கள் இதனை கட்ட முன்வராததால், தாமே இதனை எடுத்து செய்வதாக அவர் கூறுகிறார். ககநாடா கிராமத்தின் கதாநாயகனாக இவர் புகழப்படுகிறார்.
தினமும் 10 மணிநேரம் இதற்காகச் செலவிடும் முசமி, மழைக் காலம் வருவதற்குள் சாலையை அமைக்க முயல்கிறார்.