Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி: காங்கிரஸின் மர்மமான மூன்றாவது கை பற்றிய உண்மை என்ன?

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:15 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வயதான பெண்ணொருவரை கட்டியணைக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் இந்த புகைப்படம், இதிலுள்ள மர்மமான மூன்றாவது கரம் எதுவென பலரை கேள்வி கேட்க வைத்துள்ளது.
 
டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தாஜ்யின்டர் பால் சிங் பேக்கா, "இது யாருடைய மூன்றாவது கை? நல்லதொரு மக்கள் தொடர்பு முகமையை பணியில் அமர்த்த நான் நேற்றுதான் உங்களிடம் தெரிவித்தேன்" என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
 
காங்கிரஸின் குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் விளம்பரத்தில் இந்த புகைப்படம் உள்ளது.
 
ஏபிபி செய்தி பத்திரிகையாளர் விகாஸ் பௌதவ்ரியாவும், "ராகுல் காந்தியின் முதல் படத்தில் மூன்று கைகள் இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் இரண்டாவதை பாருங்கள். இந்த மூன்றாவது கை யாருடையது? என்று கேள்வி எழுப்பி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
 
காங்கிரஸின் இந்த "கை சாதுரியம்" அக்கட்சியின் ஊழல் மனப்பான்மையை சுட்டிக்காட்டுவதாக பாஜக அமைச்சர் ஸ்மிரிதி ராணி கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
ரிவர்ஸ் புகைப்பட தேடலில் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
 
2015ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்ட பின்னர், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பல படங்கள் பகிரப்பட்டுள்ளன.
 
புகைப்படத்தின் பின்னணி மங்கலாக்கப்பட்டுள்ளது. ஆனால், நியாய் திட்டத்திற்கான விளம்பரமாக இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, அந்த மனிதரின் கையை தெரியாதவாறு செய்யவில்லை என்பதுதான் உண்மை.
 
இந்த புகைப்படத்தில் மூன்றாவது கை ஒன்று இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால், அது இன்னொரு காங்கிரஸ் கட்சி பணியாளரின் கரமாகும்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments