Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரச குடும்ப அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலனை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:35 IST)
ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்.
 
ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.
 
ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அத்தொகையைப் பெற மகோ மறுத்துள்ளார்.
 
அதே போல அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படவில்லை.
 
இந்த இரண்டையும் மறுத்த முதல் அரச குடும்பத்துப் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மகோ.
 
இளவரசி மகோ செவ்வாய்கிழமை ஜப்பானிய நேரப்படி காலை 10 மணியளவில் டோக்யோவில் உள்ள தன் வீட்டிலிருந்து, தன்பெற்ரோருக்கு பல முறை தலைகுனிந்து வணக்கம் கூறி, தன் திருமணத்தை பதிவு செய்யப் புறப்பட்டார்.
 
தன் இளைய சகோதரியையும் கட்டியணைத்து விடைபெற்றதாக க்யோடோ முகமையில் செய்தி வெளியானது. கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர்.
 
ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்னைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது.
 
கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருமணத்துக்குப் பிறகு இவர்கள் அமெரிக்காவில் குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments