Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (00:39 IST)
சமீபத்தில் மரணமடைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் உடல் வியாழனன்று ஜம்மு - காஷ்மீர் காவல் துறையால் அடக்கம் செய்யப்பட ஒப்படைக்கப்படும் முன், அவரது உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கிறது.
 
காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழன்று காலமானார். அவருக்கு வயது 92. நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
 
காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
 
கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments