Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை
, புதன், 6 ஜூலை 2016 (16:59 IST)
கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

 
தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம்.
 
கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.

webdunia

 

 
இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தோக்கோஜிலி மசிபா, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தனிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்திரபிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்?