Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் உடனான விமான சேவைகளை நிறுத்தி வரும் அண்டை நாடுகள்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:32 IST)
யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போதைய போர் பதற்ற சூழல் காரணமாக சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
"இருந்த போதும் மாற்று ஏற்பாடாய் யுக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் யுக்ரேனிய தலைநகரிலிருந்து முனிக் மற்றும் ஜெனீவாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன," என அவர் கூறினார்.
 
ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி யுக்ரேனுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளன. இதேபோல, ஜெர்மனியின் லுஃப்தான்சா இன்று முதல் யுக்ரேன் செல்லும் விமானங்களின் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம் அதன் விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments