Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் உடனான விமான சேவைகளை நிறுத்தி வரும் அண்டை நாடுகள்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:32 IST)
யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போதைய போர் பதற்ற சூழல் காரணமாக சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
"இருந்த போதும் மாற்று ஏற்பாடாய் யுக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் யுக்ரேனிய தலைநகரிலிருந்து முனிக் மற்றும் ஜெனீவாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன," என அவர் கூறினார்.
 
ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி யுக்ரேனுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளன. இதேபோல, ஜெர்மனியின் லுஃப்தான்சா இன்று முதல் யுக்ரேன் செல்லும் விமானங்களின் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம் அதன் விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments