Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் உடனான விமான சேவைகளை நிறுத்தி வரும் அண்டை நாடுகள்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:32 IST)
யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போதைய போர் பதற்ற சூழல் காரணமாக சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
"இருந்த போதும் மாற்று ஏற்பாடாய் யுக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் யுக்ரேனிய தலைநகரிலிருந்து முனிக் மற்றும் ஜெனீவாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன," என அவர் கூறினார்.
 
ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி யுக்ரேனுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளன. இதேபோல, ஜெர்மனியின் லுஃப்தான்சா இன்று முதல் யுக்ரேன் செல்லும் விமானங்களின் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம் அதன் விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

ஷாங்காய் மாநாட்டில் ஹீரோவான மோடி.. கண்டுகொள்ளப்படாமல் பரிதாப நிலையில் பாகிஸ்தான் பிரதமர்..!

செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு.. பெங்களூருவில் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

தி.மு.க. ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments