Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோதி பிறந்தநாள் விழா பேச்சு - ''இயற்கை நமக்கு மிகவும் நெருக்கமானது''

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:37 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் தனது பிறந்தநாளை விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி காஷ்மீர் பிரச்சனை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.


 
இன்று (செவ்வாய்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோதி, கெவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் ஒரு பையில் இருந்த பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
இந்த விழாவில் பேசிய நரேந்திர மோதி காஷ்மீர் பிரச்சனை குறித்தும் பேசினார்.
 
''கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு -காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் பாடுபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அது பிரிவினைவாதம் மற்றும் வன்முறை என வடிவமெடுத்து நாடே அந்த பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது'' என்று பிரதமர் மோதி கூறினார்.
 
மேலும் அவர் பேசுகையில், ''சுற்றுசூழல் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யாமலே வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்று நமது கலாச்சாரம் நம்புகிறது. இது தற்போது மீண்டும் உறுதியாகியுள்ளது. இயற்கை நமக்கு மிகவும் நெருக்கமானது. அது நமக்கு ஆபரணம் போல'' என்று நரேந்திர மோதி பேசினார்.
 
முன்னதாக இன்று காலையில் , நர்மதா மாவட்டத்தில் உள்ள கருடேஸ்வர் தத் கோயியில் பிரதமர் நரேந்திர மோதி வழிபாடு செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments