Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தேன்கூடு' தலைமுடி அலங்காரத்தை கண்டுபிடித்த பெண் மரணம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (16:30 IST)
உலகின் மிகவும் சிறந்ததாக அறியப்படும் 'தேன்கூடு' என்ற தலைமுடி அலங்காரத்தை (சிகை அலங்காரத்தை) முதலில் வடிவமைத்த பெண்மணி தன்னுடைய 98 ஆம் வயதில் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளார்.
 

 
பத்திரிகை ஒன்றிற்கு வித்தியாசமான படத்தை வழங்க கேட்டுக்கொண்டதால் மார்கிரெட் வின்சி ஹெல்ட் கண்டறிந்ததே பீகேவ் தலைமுடி அலங்காரம்.
 
1960 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக “உண்மையிலேயே வித்தியாசமான” படம் ஒன்றை வழங்குவதற்கு கேட்டு கொண்டபோது மார்கிரெட் வின்சி ஹெல்ட் என்பவர் 'பீ ஹைவ்' எனப்படுகின்ற நீண்ட கூம்பு வடிவ தலைமுடி அலங்காரப் பாணியை உருவாக்கினார்.
 

 
பின்புறமாக வாரி அமைக்கப்படும் இந்த தலைமுடி அலங்காரம் ஒரு வாரம் குலைந்து விடாது என்பதால் அவருக்கு அதிகப் புகழை தேடிதந்தது.
 
இந்த தலைமுடி அலங்காரத்தை தன்னுடைய சலூனில் செய்கின்ற வாடிக்கையாளர்களிடம், கழுத்துக்கு மேலே தொடுவதற்கு அவர்களின் கணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments