Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோதியை கொல்ல 5 கோடி ரூபாய் - ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (13:06 IST)
புதுச்சேரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்பட தலைவர்கள் சிலர் குறித்து ஃபேஸ்புக்கில் அச்சுறுத்தும் வகையில் பதிவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
புதுச்சேரி மணவெளி பகுதியைச்‌ சேர்ந்த தங்கதுரை (வயது 43), வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சத்தியானந்தம் (வயது 45) என்பவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார்‌ அளித்திருந்தார்.
 
அதில், 'சத்தியா சத்தியா' என்ற பெயரில் இயங்கி வரும் சந்தியானந்தம் என்பவருக்குச் சொந்தமான ஃபேஸ்புக் பக்கத்தில், 'மோதியை கொல்ல தயார். விலை 5 கோடி. கொடுக்க யார் தயார்?' என்று கேட்டுப் பதிவிட்டிருந்தார். மேலும் புதுச்சேரியை சேர்ந்த சில சமுதாய தலைவர்களையும் இழவுப்படுத்தி பதிவு செய்திருந்தார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த இந்த பதிவு, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக தங்கதுரை அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இதனைத் தொடர்ந்து பிரதமர் குறித்து தவறாகப் பதிவிட்டிருந்த 'சத்தியா சத்தியா' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வரும் சத்தியானந்தம் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
பின்னர் அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையின் தொடர்‌ விசாரணையில், சத்தியானந்தம் பிரதமர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர் குறித்தும் தவறான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.‌ பிறகு சந்தியானந்ததை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புதுச்சேரி காலப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.
 
முன்னதாக, பிரதமர் மோதி மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றி தவறாகப் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து காவல்துறையினர் நீக்கினர்.
 
"சமூக ஊடகத்தில் இதுபோன்ற பதிவிட்டு, இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சத்தியானந்தம் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 505 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments