Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?

Jesus
, புதன், 21 டிசம்பர் 2022 (22:56 IST)
உலகமெங்கும் நடக்கும் மிக முக்கியமான அகழாய்வுப் பணிகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உறுதி செய்ய நடத்தப்படும் பணிகளும் ஒன்று.

 
அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறியப்பட்ட இயேசு கிறிஸ்து அணிந்து இருந்தாகக் கூறப்படும் அங்கி சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிரியர் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்கியை இங்கிருக்கும் மக்கள் கிறிஸ்துவின் புனித ஆடையாகக் கருதி வழிபடுகின்றனர். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பழைய அங்கி, 1,500 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
 
இயேசு கிறிஸ்து பயன்படுத்தியது என்று நம்பப்படும் இந்த அங்கியை பொதுமக்களால் நாள்தோறும் பார்க்க முடியாது. ஒரு சில தசாப்தங்களுக்கு ஒரு முறை பொது மக்கள் பார்வைக்காக இந்த அங்கி வெளியே வைக்கப்படுகிறது.
 
 
இயேசு அணிந்திருந்த ஆடை என்று கூறப்படும் ஆடை.
 
மழை, பனி போன்ற கடுமையான வானிலையையும் பொருட்படுத்தாமல் இயேசுவின் இந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்க, வழிபாடு நடத்த இந்த தேவாலயத்திற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர்.
 
இது போன்ற மத நினைவு சின்னங்கள், மனிதர்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் பழைமையானது என்கிறார், வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ரிச்சர்டு மைல்ஸ். இங்கு வரும் யாத்ரீகர்களும் இயேசுவின் இந்த அங்கியை ஓர் உடையாகப் பார்க்காமல், மிகவும் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாகக் கருதுகின்றனர் எனவும் ரிச்சர்டு மைல்ஸ் தெரிவித்தார்.
 
தமிழர் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை - நீண்ட இழுபறிக்கு பிறகு அங்கீகாரம், யார் இவர்?
15 மே 2022
இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாகத் தொடரும் சண்டைக்கு என்ன காரணம்?
6 ஆகஸ்ட் 2022
இந்தியா வந்த ரஷ்யரை மதம் மாற கட்டாயப்படுத்திய பழங்கால வரலாறு தெரியுமா?
27 மார்ச் 2022
1,500 ஆண்டுகள் பழமையான ஆணி
ஆணி வைக்கப்படும் உறை (மேலே) மற்றும் அந்த ஆணியின் படம்
படக்குறிப்பு,
ஆணி வைக்கப்படும் உறை (மேலே) மற்றும் இயேசுவை சிலுவையில் அறையப் பயன்படுத்தப்பட்ட ஆணி என்று கூறப்படும் ஆணியின் படம்.
 
திரியர் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற இந்த தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு தொடர்புடைய இந்த நினைவுச் சின்னம் மட்டுமின்றி, வேறொரு முக்கியமான பொருளும் வைக்கப்பட்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றி அறையப் பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றாகக் கருதப்படும் பழைமையான ஓர் ஆணி இங்கு பல நூறு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரலாற்று ஆசிரியரான ரிச்சர்டு மைல்ஸ் இந்த ஆணியைக் கையில் தொட்டுப் பார்த்து 'இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக' இருப்பதாகக் கூறுகிறார்.

 
பார்ப்பதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப் பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றான இதனை காணும் மத நம்பிக்கை மிக்க நபர்களுக்கு உணர்ச்சிபூர்வமான தருணமாக அமையும் என்கிறார். இது போன்ற மத நினைவுச் சின்னங்கள் மூலமாக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய தருணங்களின் உணர்வுகளை மீண்டும் உணர முடியும். ஒரு தொல்பொருள் ஆய்வாளராக எனக்கு இந்தப் பொருட்கள் மிகவும் விலை மதிப்பற்றவை. ஆனால் இந்த மத நினைவுச் சின்னங்கள் மக்களிடையே மத ரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை.

 
இயேசு கிறிஸ்து தொடர்பான அகழாய்வில் ஈடுபட்டு இருந்த ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் கென் டார்க், கடந்த 2020ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து குழந்தைப் பருவத்தின் போது வாழ்ந்த வீடு என்று கூறப்படும் வீடு முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று அவர் கண்டறிந்தார்.

 
இஸ்ரேல் நாட்டின் நசரத் நகரத்தில் அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்ட போது இது உள்ளது.

 
அந்த வீடு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசஃப் ஆகியோர் வாழ்ந்த வீடு என்று முதலில் 19ஆம் நூற்றாண்டில் கூறப்பட்டது. 1930களில் அதை வல்லுநர்கள் மறுத்தனர். 2006 முதல் 14 ஆண்டுகள் அப்பகுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் கென் டார்க், அது இயேசு கிறிஸ்துவின் வீடுதான் என்று நிறுவ ''இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை'' என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக உறுப்பினர் சேர்க்கை, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆலோசனை கூட்டம் !