எவ்வாறு குறிக்கப்படுகிறது ஈத் பெருநாள்? ஆச்சரியப்படவைக்கும் சிக்கலான நடைமுறை

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:47 IST)
ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறைகளிலும் ஈத் நாள் குறிக்கப்படுகிறது. ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டானியின் அறிவிப்பையும் அப்பிரிவு மக்களும், சிறுபான்மையினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக்களின் அறிவிப்பையும் பின்பற்றுகின்றனர்.
 
பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறையாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண்டாடினர்.
 
இதே சமயத்தில் மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் துருக்கியில், வானியல் கணக்கீடுகளை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப்படுகிறது.
 
ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாய மதத்தலைவர்களின் அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர். இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுத்தும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் உயிரோட இருக்கணும்!. அதனால் மோடியை ஆதரிக்கிறேன்!.. டாப்சி ராக்ஸ்!...

திருமணமான அடுத்த நாளே வேலை காலி.. போலீஸ் கான்ஸ்டபிள் அதிர்ச்சி..!

48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்று ஒரே நாளில் 15,000 ரூபாய் குறைந்த வெள்ளி விலை.. தங்கமும் குறைவு..!

திருப்பி அடிக்க காங்கிரஸிற்கு பவர் இருக்கிறதா? என எப்படி கேட்கலாம்: சசிகாந்த் எம்பி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments