Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹுண்டாய் சர்ச்சை இடுகை விவகாரம்: கொரிய தூதரிடம் விளக்கம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் Social embed from twitter

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (00:36 IST)
காஷ்மீர் சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஹுண்டாய் பாகிஸ்தான் வெளியிட்ட சமூக ஊடக இடுகை மற்றும் அதன் பின்பு அந்நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்ட விளக்கம் இந்தியாவில் பயனர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
 
பலரும் அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் வேளையில், டெல்லியில் உள்ள கொரிய தூதரை அழைத்து ஹுண்டாய் நிறுவன செயல்பாடு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டிருக்கிறது.
 
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹுண்டாய் பாகிஸ்தான் பகிர்ந்த சர்ச்சைக்குரிய பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த பிரச்னை இந்தியாவின் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டது, எனவே இதில் சமரசம் செய்ய முடியாது என்றும் அதில் கொரிய தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் ஹுண்டாய் தனது ட்வீட்டில், "பாகிஸ்தானால் வழங்கப்படும் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள்’ மற்றும் ‘காஷ்மீரில் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை நினைவுகூர' ஆதரவு தர வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments