Publish Date: Mon, 21 Jun 2021 (13:56 IST)
Updated Date: Mon, 21 Jun 2021 (13:59 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் கலந்து கொள்கிறார். லாரெல் ஹப்பார்ட் என்னும் அந்த தடகள வீர்ர் நியூசிலாந்து பெண்கள் அணியில் விளையாடவுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2015ஆம் ஆண்டு திருநங்கை தடகள வீரர்களுக்கு, டெஸ்டோஸ்டெரோன் குறிப்பிட்ட அளவில் இருந்தால் அவர்கள் பெண்கள் அணியில் விளையாடலாம் என விதிகளை மாற்றியிருந்தது.
ஹப்பர்ட் இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஆண்கள் அணியில் இருந்தார்.
திருநங்கை ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கமும், அவருக்கு கூடுதல் நன்மை உள்ளது என வாதங்கள் ஒரு பக்கம் வர தொடங்கியுள்ளது. உள்ளனர்.
43 வயது ஹப்பர்ட், பளு தூக்கும் போட்டியில் 87 எடைப்பிரிவில் கலந்து கொள்ளவுள்ளார்.