Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி நாஜி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரின் திசுக்கள் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 13 மே 2019 (20:58 IST)
ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் திசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (திங்கட்கிழமை) புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மாதிரிகள் நுண்ணிய ஸ்லைடுகளில் காணப்பட்டன.
 
1952ஆம் ஆண்டு உயிரிழந்த அந்த மருத்துவரின் வாரிசுகள், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை கண்டறிந்தனர்.
 
ஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசிய கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று திசுக்களை சேகரிக்கும் பணியை ஸ்டீவ் நாசிகளுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
 
சுமார் ஒரு மில்லி மீட்டர் நீளமே உள்ள அந்த திசுக்களை சேகரித்த ஸ்டீவ் அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments