Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி நாஜி ஆட்சியில் கொல்லப்பட்ட 300 பேரின் திசுக்கள் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 13 மே 2019 (20:58 IST)
ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் திசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இன்று (திங்கட்கிழமை) புதைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்லி பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் உடற்கூறியல் பேராசிரியரான ஹெர்மன் ஸ்டீவ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த மாதிரிகள் நுண்ணிய ஸ்லைடுகளில் காணப்பட்டன.
 
1952ஆம் ஆண்டு உயிரிழந்த அந்த மருத்துவரின் வாரிசுகள், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த மாதிரிகளை கண்டறிந்தனர்.
 
ஹிட்லரின் ஆட்சியை எதிர்த்த அரசிய கைதிகளை கொலை செய்த பின், அவர்களது உடல்களை பெற்று திசுக்களை சேகரிக்கும் பணியை ஸ்டீவ் நாசிகளுடன் சேர்ந்த திட்டமிட்டு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
 
சுமார் ஒரு மில்லி மீட்டர் நீளமே உள்ள அந்த திசுக்களை சேகரித்த ஸ்டீவ் அவற்றை சிறிய கறுப்பு நிற பெட்டிகளில் அவர்களது பெயர்களுடன் சேகரித்து வைத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments