Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனிய மேயர்களை கடத்தியதை கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (10:15 IST)
யுக்ரேனின் தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக யுக்ரேனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.


அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் என சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஒரு கட்டடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது சம்பந்தமாக ட்விட்டரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கூறியபோது, "மெலிடோபோல் மற்றும் டினிப்ரோருட்னே மேயர்களை, ரஷ்ய ஆயுதப் படைகள் கடத்தியதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இது யுக்ரேனில் உள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீதான மற்றொரு தாக்குதல் மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் சட்டவிரோத மாற்று அரசாங்க கட்டமைப்புகளை நிறுவுவதற்கான முயற்சியாகும்"என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments