Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெருவோர குழந்தைகளிடம் பாகுபாடு: தில்லி உணவகம் மீது குற்றச்சாட்டு

தெருவோர குழந்தைகளிடம் பாகுபாடு: தில்லி உணவகம் மீது குற்றச்சாட்டு
, வியாழன், 16 ஜூன் 2016 (17:22 IST)
தில்லியில், தெருவோர குழந்தைகளுக்கு உணவகம் ஒன்று உணவு பரிமாற மறுத்த விவகாரத்தில், குழந்தைகள் மீது பாகுபாடு காட்டியதாக உணவகம் மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
 

 
தில்லியில் நன்கு அறியப்பட்ட வணிக மற்றும் சுற்றுலா பகுதியுமான கன்னாட் பிளேசில் உள்ள உணவகம் ஒன்றில், குழந்தைகளுக்கான மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை ஒன்றிற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
 
தன் கணவருடைய பிறந்தநாளை கொண்டாடிய சோனாலி ஷெட்டி என்ற எழுத்தாளர், கன்னாட் பிளேசில் உள்ள அந்த உணவகத்துக்கு தெருவோரக் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாற உணவகம் மறுத்துவிட்டது.
 
குழந்தைகளுக்கு இலவச உணவு வேண்டி சோனாலி ஷெட்டி கோரியதாக உணவகம் விளக்கம் அளித்துள்ளது. அதனை சோனாலி ஷெட்டி மறுத்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்வு எழுதாமலே 30 மாணவர்கள் பாஸ் : பீகார் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி