Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புர்கா அணிவதை தடை செய்த நாடுகள் எவை?

புர்கா அணிவதை தடை செய்த நாடுகள் எவை?
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:31 IST)
ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை தடை செய்துள்ளது.
ஈஸ்டர் அன்று இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இப்படியான சூழ்நிலையில் எந்தெந்த நாடுகளில் முகத்தை முழுமையாக மூடி, ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது என காண்போம்.
 
1. பிரான்சில்தான் முதல்முதலாக அதாவது 2011 ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.
 
2. 2018 ஆகஸ்ட் மாதம், டென்மார்க்கில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. 
 
3. நெதர்லாந்து 2018 ஜுனில் முகத்தை முழுமையாக மூடி அடை அணிவதை தடை செய்தது. 
 
4. ஜெர்மனியில் கார் ஒட்டும் போது முழுமையாக முகத்தை மூட கூடாது.
 
5. ஆஸ்திரியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டு பள்ளிகள், நீதிமன்றங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.
 
6. பெல்ஜியத்தில் முகத்தை மூடி ஆடை அணிவது ஜூலை 2011 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. 
 
7. நார்வேயில் ஜூன் 2018 ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இயற்றப்பட்டது.
 
8. பல்கேரியா நாடாளுமன்றம் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களுக்கு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றியது.
 
9. 2015 ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிந்த பெண்களால் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து சாட், கெபோன், கேமரூனின் வடக்கு பகுதி, நைஜரின் டிஃபா பகுதி மற்றும் காங்கோ குடியரசில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.
 
10. அல்ஜீரியாவில் அரசு ஊழியர்கள் முகத்தை முழுமையாக மூடுவது அக்டோபர் 2018-ல் தடை செய்யப்பட்டது.
 
11. சீனாவில் சின்ஜியாங்கில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவது, நீளமாக தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருக்கலைப்பின் போது பெண் மரணம் - சித்த மருத்துவர் மாயம் !